சினிமா
மகேந்திரன், ஷில்பா நடிப்பில் உருவாகிவரும் ‘ரங்கராட்டினம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்..
காயத்திரி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘ரங்கராட்டினம்‘. இதில் கதாநாயகனாக மகேந்திரன் நடிக்கிறார். கதாநாயகி ஷில்பா. இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை - செல்வநம்பி, ஒளிப்பதிவு - ராசாமதி, படத்தொகுப்பு - விஷால் வி.எஸ்., பாடல்கள் - நா.முத்துகுமார், யுகபாரதி, ஏகாதசி,
நடனம் - தினேஷ், நிர்வாகத் தயாரிப்பு -பெருமாள் காசி, தயாரிப்பு - ஜி.ராமசாமி, எழுத்து, இயக்கம் - சுந்தரன்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது... “ஒரு சேட்டைக்கார பையன், பயங்கர குறும்புக்காரன். அவர் அடக்கமும், அமைதியும் கொண்ட ஒரு பெண்ணைப் பார்த்து ஒரு தலையாக காதலிக்க ஆரம்பிக்கிறான்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் இவனை விடபயங்கர சேட்டை மற்றும் குறும்புக்காரப் பெண் என்று தெரிகிறது. எனவே அவளை விட்டு விலக நினைக்கிறான். ஆனால், அவள் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை நகைச்சுவையாக இதில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.
இசை - செல்வநம்பி, ஒளிப்பதிவு - ராசாமதி, படத்தொகுப்பு - விஷால் வி.எஸ்., பாடல்கள் - நா.முத்துகுமார், யுகபாரதி, ஏகாதசி,
நடனம் - தினேஷ், நிர்வாகத் தயாரிப்பு -பெருமாள் காசி, தயாரிப்பு - ஜி.ராமசாமி, எழுத்து, இயக்கம் - சுந்தரன்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது... “ஒரு சேட்டைக்கார பையன், பயங்கர குறும்புக்காரன். அவர் அடக்கமும், அமைதியும் கொண்ட ஒரு பெண்ணைப் பார்த்து ஒரு தலையாக காதலிக்க ஆரம்பிக்கிறான்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் இவனை விடபயங்கர சேட்டை மற்றும் குறும்புக்காரப் பெண் என்று தெரிகிறது. எனவே அவளை விட்டு விலக நினைக்கிறான். ஆனால், அவள் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை நகைச்சுவையாக இதில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.