சினிமா
கிசுகிசு

எவ்வளவு கொடுத்தாலும் வர மாட்டேன்... பிடிவாதம் பிடிக்கும் நடிகை

Published On 2020-09-09 22:26 IST   |   Update On 2020-09-09 22:26:00 IST
எவ்வளவு கொடுத்தாலும் அங்கு மட்டும் வர மாட்டேன் என்று பிரபல நடிகை ஒருவர் பிடிவாதம் பிடித்து வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த மஞ்சான நடிகையிடம், பெரிய முதலாளி வீட்டிற்கு செல்ல அழைப்பு வந்ததாம். நடிகை சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே விட்டுவிட்டாராம். ஆனால், அவர்களோ விடாமல் நடிகையை தொடர்ந்து கேட்டு வருகிறார்களாம். நடிகையோ செல்ல தயங்குகிறாராம்.

பணம் அதிகமாக தருகிறோம் என்று சொல்லியும், நடிகை வரமாட்டேன் என்று கூறுகிறாராம். இப்போதுதான் நான் ஏதோ கொஞ்சம் நல்ல பெயர் எடுத்து இருக்கிறேன். அங்கு வந்தால் இருக்கும் பெயரும் கெட்டு போய்விடும் என்று நெருங்கியவர்களிடம் சொல்லி வருகிறாராம்.

Similar News