சினிமா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் சொன்ன உண்மையை மறைக்க போராடி வருகிறாராம்.
வெற்றி படங்களில் நடித்து வந்த வாரிசு நடிகையின் சமீபத்திய திரைப்படம் சரியாக ஓடவில்லையாம். இதையடுத்து நல்ல கதைகளை தேடி வரும் நடிகை தனக்கு தெரிந்தவர்களிடம் நானே ஒரு படத்தை தயாரிக்க போகிறேன் என்று சொல்லி இருக்கிறாராம். இந்த விஷயம் காட்டுத்தீ போல் பரவி நடிகைக்கு வேட்டு வைக்கும் அளவிற்கு வந்து விட்டதாம்.
என்கிட்ட பணம் இல்லை. நான் அப்படி சொல்லவே இல்லை. அது பொய் என்று சொல்லி வருகிறாராம். இருந்தாலும் அதை அனைவரும் ஏற்க மறுக்கிறார்களாம். விளையாட்டாக சொல்ல போய் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பி வருகிறாராம் நடிகை.