சினிமா
கிசுகிசு

எவ்வளவு கொடுத்தாலும் போக மாட்டேன்.... அடம் பிடிக்கும் நடிகை

Published On 2020-09-01 22:15 IST   |   Update On 2020-09-01 22:15:00 IST
எவ்வளவு பணம் கொடுத்தாலும் அங்கு மட்டும் செல்ல மாட்டேன் என்று நடிகை ஒருவர் கூறியிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, காதலருடன் ஏற்பட்ட பிரச்சனையால் மிகவும் பிரபலமாகி விட்டாராம். இவருக்கு மிகவும் பிரபலமாக வேண்டும் என்று ஆசை இருக்கிறதாம். அதற்காக எதாவது செய்து கொண்டே இருக்கிறாராம். ஆனால், எதுவும் பலன் அளிக்கவில்லையாம்.

இந்நிலையில், நடிகையை பெரிய முதலாளி வீட்டிற்கு அழைக்கிறார்களாம். ஆனால், நடிகை செல்ல மறுக்கிறாராம். அதிக பணம் கொடுக்கிறோம் என்று கூறியும் நடிகை செல்ல மறுக்கிறாராம். அவரது காதலர் அங்கு சென்றதால் தான் காதல் பிரிந்ததாம். அதனால் தான் செல்ல மறுக்கிறார் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.

Similar News