சினிமா
மீண்டும் நடிக்க ஆசைப்படும் இளம் நடிகை
படிக்கும் போதே முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க ஆசைபட்டிருக்கிறாராம்.
படிக்கும் போதே கதாநாயகியாக அறிமுகமான யானை நடிகை, படிப்பில் கவனம் செலுத்தாமல் நடிப்பில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வந்தாராம். இதனால் படிப்பை கோட்ட விட்ட நடிகை, கல்லூரி முடித்த பிறகு மீண்டும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாராம்.
தற்போது படிப்பு முடிந்து விட்டதால் மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக புதிய புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்கிறாராம். மேலும் தெரிந்த இயக்குனர்கள், நடிகர்களுக்கு புகைப்படங்களை அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.