சினிமா
வலை வீசும் நடிகர்... நம்ப பயப்படும் தயாரிப்பாளர்கள்
தமிழில் தற்போது வளர்ந்து வரும் நடிகர் ஒருவர், பல தயாரிப்பாளர்களுக்கு வலை வீசி வருகிறாராம்.
தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கும் வாரிசு நடிகர், தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளாராம். கதை நன்றாக இருந்தால் போதும் சம்பளம் பெரிய விஷயம் இல்லை என்று கூறிவந்த நடிகர், தற்போது சம்பளம் தான் முக்கியம் என்று கூறிவருகிறாராம்.
மேலும் தற்போது உறவினர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் நடிகர். ஆனால், இந்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்க வில்லையாம். இதற்காக பல தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து, நல்ல கதை மாஸ் இயக்குனர் இருக்கிறார், நான் நடிக்கும் படத்தை தயாரிக்க வாருங்கள் என்று அழைக்கிறாராம். இதற்கு தயாரிப்பாளர்களோ உறவினருடன் சேர்ந்து பணத்தை வீணடித்து விடுவாரோ என்று நடிகரை நம்ப பயப்படுகிறார்களாம்.