சினிமா
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - புலம்பும் காமெடி நடிகர்
காமெடியனாக அறிமுகமாகி ஹீரோவாக உயர்ந்திருக்கும் நடிகர் ஒருவர் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என புலம்புகிறாராம்.
காமெடி ஹீரோவுக்கு சம்பளம் கொடுப்பதற்காக சில கோடிகளை பைனான்சியரிடம் முக்கிய தயாரிப்பாளர் ஒருவர் வாங்கியிருந்தாராம். அதே பைனான்சியரிடம் தான் காமெடி நடிகரும் தனது முந்தைய படத்துக்காக கடன் வாங்கினாராம்.
சம்பளப் பணம் காமெடி நடிகருக்கு போய் சேர்ந்த ஒருசில நிமிடங்களிலேயே தன்னுடைய ஆள் ஒருவரை அந்த நடிகரின் ஆபீசுக்கு அனுப்பிய பைனான்சியர், கடன் தொகையைக் கறாராக வசூலித்துவிட்டாராம். இதனால் காமெடி நடிகர் ஷாக்காகி இருக்கிறாராம்.