சினிமா
கிசுகிசு

பட வாய்ப்புக்காக அதிரடி முடிவெடுத்த நடிகை

Published On 2020-02-18 21:56 IST   |   Update On 2020-02-18 21:56:00 IST
அக்கட தேசத்தை சேர்ந்த திறமையான நடிகை ஒருவர், பட வாய்ப்புக்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம்.
அக்கட தேசத்தில் மிக திறமையான நடிகை ஒருவர், கடந்த இரண்டு வருடங்களாகவே மீடூ புகார்களை கூறி போர்க்கொடி தூக்கி வந்தாராம். இதனாலேயே எதற்கு வம்பு என இவரை தேடி வந்த பட வாய்ப்புகளும் இவரை விட்டு ஒதுங்கி சென்றனவாம். தற்போது கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே வைத்துள்ள அந்த நடிகை, சமீப நாட்களாக தனது சீரியஸ் முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு ஜாலி மூடுக்கு மாறியுள்ளாராம். 

அதுமட்டுமல்ல முன்பெல்லாம் தனது உடையில் அதிக கவனம் செலுத்தாத அந்த நடிகை, சமீபத்தில் புதுவிதமான டிசைனிங் உடைகளை அணிந்துகொண்டு விதவிதமான போஸ்களில் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறாராம். இவை அனைத்தும் படவாய்ப்புக்காக அவர் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறதாம்.

Similar News