சினிமா
கிசுகிசு

இந்த தடவையும் ஏமாந்துட்டேன் - நடிகையின் வருத்தம்

Published On 2020-01-24 17:18 GMT   |   Update On 2020-01-24 17:18 GMT
தெலுங்கில் பிரபலமாகி தற்போது தமிழில் நடித்து வரும் நடிகை, இந்த தடவையும் ஏமாந்துட்டேன் என்று மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம்.
தெலுங்கில் பிரபலமான நடிகை தமிழில் வெளியான முதல் படத்தில் நடிகையின் கதாபாத்திரம் படத்தின் வேகத்திற்கு தடையாக இருக்கிறது என்று சர்ச்சை எழுந்ததால், அந்த படத்தில் நடிகையின் காட்சிகளை தூக்கி விட்டார்களாம். இதனால், அடுத்ததாக நடித்தால் பெரிய ஹீரோ படத்தில்தான் என்று விடாப்பிடியாக இருந்து ஒல்லி நடிகர் படத்தில் நடித்திருந்தாராம்.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டதாம். இந்த படத்திலும் நடிகையின் கதாபாத்திரம் பேசப்பட வில்லையாம். இதையறிந்த நடிகை இந்த தடவையும் ஏமாந்துட்டேன். அடுத்த படத்தில் நிச்சயம் நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று வருத்தமாக கூறுகிறாராம்.
Tags:    

Similar News