சினிமா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயாகியாக இருக்கும் மூன்றெழுத்து நடிகை திருமணம் செய்து கொள்ள தயாராகியுள்ளாராம்.
பிரபல மூன்றெழுத்து நடிகை பதினைந்து வருடங்களாக நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க தாயார் ஆசைப்பட்டாராம். நடிகையோ பட வாய்ப்புகளை காரணம் காட்டி, திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தாராம். இப்போது அவருக்கு திடீர் திருமண ஆசை வந்திருக்கிறதாம்.
“உங்கள் ஆசைப்படி திருமணத்துக்கு நான் தயார். மாப்பிள்ளை பாருங்கள்” என்று அந்த நடிகை தாயாரிடம் கூறிவிட்டாராம். சந்தோஷப்பட்ட தாயார், மகளுக்கு பொருந்துகிற மாதிரி மாப்பிள்ளையை தேடி வருகிறாராம்.