சினிமா
மீண்டும் தயாரிப்பாளரை புலம்ப வைக்கும் நடிகர்
படத்தில் ஒப்பந்தம் ஆகி, படப்பிடிப்பு வராமல் இருந்த நடிகர், மீண்டும் வருகிறேன் என்று சொல்லி வராமல் தயாரிப்பாளரை புலம்ப வைத்திருக்கிறாராம்.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் வம்பு நடிகர், கடைசியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். ஆனால், குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்புக்கு வராமல் அந்த படம் நிறுத்தப்பட்டதாம். ஒரு வழியாக சமரசம் செய்து படப்பிடிப்புக்கு வர சம்மதம் தெரிவித்தாராம்.
சபரிமலைக்கு மாலை போட்ட பிறகு, தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தன் பாணியிலேயே செயல்படுகிறாராம். இதனால் நடிப்பதற்காக வம்பு தேதி கொடுத்துள்ள படத்தின் தயாரிப்பாளர் அந்த கடவுள் தான் காப்பாத்தணும் என்று நொந்துபோய் புலம்புகிறாராம்.