சினிமா
கிசுகிசு

சம்பளம் வாங்கிட்டு தான் நடிப்பேன் - நடிகர் கறார்

Published On 2019-11-25 14:51 IST   |   Update On 2019-11-25 14:51:00 IST
தமிழில் முன்னணி நடிகராக திகழும் பிரபலம் ஒருவர், சம்பளம் வாங்கிட்டு தான் நடிப்பேன் என தயாரிப்பாளர்களிடம் கறாராக சொல்லிவிட்டாராம்.
மூன்றெழுத்து பெயர் கொண்ட நடிகர் நடித்து வந்த பல படங்கள் தோல்வியை தழுவியதால், சில தயாரிப்பாளர்கள் அவரிடம் பேசியபடி சம்பளம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தனராம். ஆனால் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான நான்கெழுத்து படம் கோடிகளில் செஞ்சுரி அடித்து வசூல் மழை பொழிந்ததாம்.

இதனால் தெம்பான அந்த நடிகர், இனி என்னை யார் ஒப்பந்தம் செய்ய வந்தாலும் முன்பணம் தரும்போதே முழு சம்பளத்தையும் தந்தாக வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாராம். இதனால் அந்த நடிகரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்களாம்.  

Similar News