சினிமா
வாய்ப்புக்காக கொள்கையை மாற்றிய நடிகை
முதல் படத்தின் மூலம் பிரபலமாகி புகழின் உச்சிக்கு சென்ற நடிகை, தற்போது பட வாய்ப்புக்காக கொள்கையை மாற்றி இருக்கிறாராம்.
முதல் படத்தில் நோயாளியாக நடித்து பிரபலமான நடிகை, பலருடைய பாராட்டால் புகழின் உச்சிக்கு சென்றாராம். அதன் பிறகு பல கதைகளை கேட்ட நடிகை எதில் நடிப்பது என்று தெரியாமல் நிராகரித்தாராம். இதனால், பல பட வாய்ப்புகள் அவருக்கு பறிபோனதாம்.
ஒரு வழியாக தற்போது ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறாராம். இந்நிலையில், மற்ற நடிகைகள் போல் இருந்தால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று தனது கொள்கையை மாற்றி இருக்கிறாராம். அதனால் கவர்ச்சியாக போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் வாய்ப்புக்காக பரப்பி வருகிறாராம்.