சினிமா
கிசுகிசு

சம்பளத்தில் பிடிவாதம் பிடிக்கும் நடிகை

Published On 2019-10-22 14:58 GMT   |   Update On 2019-10-22 14:58 GMT
தெலுங்கில் பிரபலமான நடிகை, தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க இருக்கும் நிலையில், சம்பள விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கிறாராம்.
தெலுங்கில் வெளியான ஒரே படத்தின் மூலம் புகழ்பெற்ற மந்தமான நடிகை, அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறதாம். இதனால் திடீரென கிடைத்த வெற்றியை தலைமேல் ஏற்றிக்கொள்ளும் சில நடிகைகள் சிக்கிக்கொள்ளும் சர்ச்சைகளில் நடிகையும் தற்போது சிக்கி வருகிறாராம். 

தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், தெலுங்கு நடிகர் ஒருவருடன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாராம். ஆனால் சம்பள விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாததால் இந்த படத்தில் இருந்து அதிரடியாக விலகி கொண்டாராம். 

சமரசம் செய்ய பலர் முயற்சித்தும் நடிகை பிடிவாதமாக ஒரே தொகையில் இருந்தாராம். சம்பள விஷயத்தில் சமரசம் செய்ய முடியாத காரணத்தால் நடிகை இதுபோல் பல படங்களை கோட்டை விட்டுவிட்டார் என்று பலரும் பேசிவருகிறார்களாம்.
Tags:    

Similar News