சினிமா
தயாரிப்பாளர்களை புலம்ப வைக்கும் நடிகை
கோலிவுட், டோலிவுட் என பிசியாக நடித்துவரும் நடிகையின் செயலால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம்
மும்பையில் இருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்குமதி ஆகி இருக்கும் ‘ராசியான’ நடிகையுடன் உதவியாளர்கள் என்ற பெயரில் படப்பிடிப்புக்கு மூன்று பேர் வருகிறார்களாம். அந்த மூன்று பேர்களுக்கும் தயாரிப்பாளர்கள்தான் சம்பளம் கொடுக்கிறார்கள்.
ஒரு உதவியாளருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் மூன்று பேருக்கு ரூ.90 ஆயிரம் தயாரிப்பாளர்களிடம் கறந்து விடுகிறாராம், அந்த நடிகை. நடிகையின் இந்த செயலால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம்.