சினிமா
பட ரிலீசில் சிக்கல்...... பரிகாரம் செய்யும் நடிகை
பிரபல நடிகை நடித்த படங்கள் ரிலீஸாவதில் சிக்கல்கள் ஏற்படுவதால் அவர் பரிகாரம் செய்ய கோயில்களைத் தேடி செல்கிறாராம்.
தமிழ் திரையுலகில் 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நாயகியாக வலம் வருகிறாராம் மூன்றெழுத்து நடிகை. ஏற்கனவே தயாரிப்பாளர் ஒருவருடன் அந்த நடிகை நெருங்கி பழகி வந்தாராம். சில பிரச்சனைகளால் அவரை பிரிந்துவிட்டாராம். இதனால் மனமுடைந்த அந்த நடிகை தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம்.
அவர் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளாராம். அந்த நடிகை நடித்த படங்கள் ரிலீஸாவதில், தற்போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றனவாம். இதனால், அப்செட்டில் இருக்கும் நடிகை, பரிகாரம் செய்ய தன் அம்மாவுடன் சேர்ந்து கோயில்களைத் தேடி சென்று கொண்டிருக்கிறாராம்.