சினிமா

வில்லன் வேடத்திற்கு அடம் பிடிக்கும் ஹீரோ!

Published On 2017-10-03 17:08 GMT   |   Update On 2017-10-03 17:08 GMT
கதாநாயகனாக நடித்த படங்கள் கைக்கொடுக்காததால், தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் வில்லன் வேடம்தான் வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறாராம் நடிகர்.
மதுரையில் வில்லனாக ஜிகர்தண்டா குடித்த நடிகர், பல படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். நடிகரும் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று எல்லா படத்திலும் நடித்தாராம். ஆனால், எந்த படமும் நடிகருக்கு கைக்கொடுக்க வில்லையாம். இதனால் மீண்டும் வில்லன் வேடத்தில் நடிக்க ஆரம்பித்தாராம்.

சமீபத்தில் வில்லனாக நடித்த படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதாம். மேலும் முன்னணி நடிகர் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். இந்த படமும் கைக்கொடுக்கும் என்று நம்புகிறாராம். இதனால், வில்லன் வேடத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து வருகிறாராம் நடிகர்!
Tags:    

Similar News