சினிமா

பஞ்ச் டயலாக்குகள் பேச பயப்படும் நடிகர்

Published On 2016-09-09 12:38 GMT   |   Update On 2016-09-09 12:38 GMT
நடிகர் ஒருவர் பஞ்ச் டயலாக்குகள் பேச ரொம்பவே பயப்படுகிறாராம். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்...
உச்ச நடிகருக்கு பிறகு தனது படங்களில் அதிக பஞ்ச் டயலாக்குகளை பயன்படுத்தியவர் தளபதி நடிகர்தான். ஆரம்பத்தில் கதைக்காக எழுதப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் அதன்பின்னர், அரசியலை அட்டாக் பண்ணுகிற வகையில் அமைந்தது, அவருக்கு தியேட்டரில் விசிலை அள்ளிக் கொடுத்தாலும், அரசியல் வட்டாரங்களில் தளபதி நடிகருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், அவரது படங்கள் வெளிவருவதில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், படிப்படியாக தனது படங்களில் பஞ்ச் டயலாக்குகளை குறைத்துக் கொண்டு வருகிறாராம் தளபதி நடிகர். படங்களின் கதைக்கு சம்பந்தப்பட்ட பஞ்ச் வசனங்களை மட்டுமே அவர் பேசி வருகிறாராம். தற்போது தளபதி நடிகர் நடித்து வரும் புதிய படத்தில்கூட இயக்குனர் நடிகருடைய ரசிகர்களை கவரும் வகையில் நிறைய பஞ்ச் டயலாக்குகளை வைத்திருந்தாராம்.

நான் சாதாரணமாக பேசினால்கூட அதை அரசியலாக்கிவிடுவார்கள் என அந்த பஞ்ச் டயலாக்குகளை எல்லாம் இயக்குனரிடம் சொல்லி தூக்கிவிட்டாராம் நடிகர். இதனால், தற்போதைய படம் எந்தவித பஞ்ச் டயலாக்குகள் இல்லாமல் வெளிவருகிறதாம். 

Similar News