சினிமா

கொலவெறி நடிகரை சமாதானப்படுத்திய தலைவரின் மனைவி

Published On 2016-08-30 12:31 GMT   |   Update On 2016-08-30 12:32 GMT
கொலவெறி நடிகரை தலைவரின் மனைவி சமாதானப்படுத்திய சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே படிப்போம்...
கொலவெறி நடிகரின் குடும்பத்தில் பால் நடிகையால் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யமான தனது மனைவியின் பேச்சையும் மீறி தன்னுடைய படத்தில் பால் நடிகையை கொலவெறி நடிகர் ஒப்பந்தம் செய்துள்ளது ஐஸ்வர்யமானவரை மிகவும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாம். ஆகையால், இந்த பிரச்சினையை தனது அப்பாவான உச்ச நடிகரிடம் கொண்டு சென்றாராம். ஐஸ்வர்யமானவர்.

இதனால், தனது மனைவி மீது கொலவெறி நடிகர் கோபத்தில் இருந்தாராம். இந்நிலையில், ஐஸ்வர்யமானவருக்கு மிகப்பெரிய பதவி ஒன்று கைகூடி வந்தது. அந்த பதவியேற்பு விழாவில் தனது கணவரையும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வைக்க ஐஸ்வர்யமானவர் எண்ணியிருந்தாராம். ஆனால், கணவர் தன்மேல் உள்ள கோபத்தால் வரமாட்டார் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், இந்த பிரச்சினையில் ஐஸ்வர்யமானவரின் தாயார் உள்ளே நுழைந்து, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்த நடிகரை பதவியேற்பு விழாவுக்கு அழைத்து வந்தாராம்.

இருப்பினும், கொல வெறி நடிகருக்கு தன் மனைவி மீது இருந்த கோபம் தணியவில்லையாம். இதனால், மேடையில் தனது மாமியாரிடம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாராம். மனைவி பக்கம் பெயருக்குகூட திரும்பவில்லையாம். இருப்பினும், தனது பதவியேற்பு விழாவில் தனது கணவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதே போதும் என்ற மனத்திருப்தியில் ஐஸ்வர்யமானவர் வீடு திரும்பினாராம்.

Similar News