சினிமா

டோலிவுட்டில் புதிய சர்ச்சையில் மாட்டிக்கொண்ட கோலிவுட் நடிகை!

Published On 2016-07-26 16:40 IST   |   Update On 2016-07-26 16:40:00 IST
கோலிவுட் நடிகை ஒருவர் டோலிவுட்டில் புதிய சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
நயன நடிகை அவர் நடிக்கும் படங்களோட படப்பிடிப்புக்கு கலந்துகொள்வதோடு சரி, அந்த படத்தின் எந்தவித புரோமோஷனுக்கும் அவர் செல்வதில்லை என்பது ஊரறிந்த செய்திதான். ஆனால், தற்போது படப்பிடிப்புக்கும் சரியாக செல்வதில்லை என்று புதிய புகார் ஒன்று அவர் மீது எழுந்துள்ளது.

இது கோலிவுட்டில் அல்ல, டோலிவுட்டில். தெலுங்கு படவுலகிலும் இவருக்கென்று தனி மார்க்கெட் உள்ளது. பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள இவர், தற்போது அங்கு மிகப்பெரிய நடிகருடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு சரிவர செல்வதில்லை என்று அப்படத்தின் இயக்குனர் நடிகை மீது புகார் எழுப்பியுள்ளார்.

இதனால், நடிகையை வைத்து அடுத்த படத்தையும் எடுக்கலாம் என்று முடிவு செய்திருந்த அப்படத்தின் தயாரிப்பாளர் தற்போது பின்வாங்கிவிட்டாராம். ஆனால், நடிகைக்கோ இதை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் எப்போதும் போல தனது பாணியை பின்பற்றியே வருகிறாராம். 

Similar News