சினிமா செய்திகள்

தமிழைத் தொடர்ந்து கன்னட படம் தயாரிக்கும் எம்.எஸ்.டோனி

Published On 2024-04-06 07:08 GMT   |   Update On 2024-04-06 10:58 GMT
  • திரைப்படத் தயாரிப்பில் களம் இறங்கிய இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி.
  • டோனி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் முதல் படத்தை தமிழில் தயாரித்தனர்.

சென்னை:

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'டோனி என்டர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரேஜ் என்ற திரைப்படத்தை தயாரித்தனர்.

இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழைத் தொடர்ந்து டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கன்னட மொழியிலும் திரைப்படம் தயாரிக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது இந்த நிறுவனத்தின் 2வது திரைப்படம் ஆகும்.

இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News