சினிமா செய்திகள்

பார்த்திபன்

குறவர் என யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என அன்றே காட்சி படுத்தியிருக்கிறேன் - பார்த்திபன் பதிவு

Published On 2023-04-02 11:03 IST   |   Update On 2023-04-02 11:03:00 IST
  • நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் திரையரங்கத்தில் அனுமதிக்காத விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இது தொடர்பாக இயக்குனர் பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை சென்னை ரோகிணி திரையரங்கில் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பேசுப்பொருளாகியுள்ளது.


அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்

இதையடுத்து யு/ஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை, வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக ரோகிணி திரையரங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


பார்த்திபன்

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குறவர் என யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். சமமாய் மதித்து இருக்கை தர வேண்டுமென 2000-ல் தேசிய விருது பெற்ற 'house full' என்ற என் படத்தில் காட்சி படுத்தியிருக்கிறேன் என்று பார்த்திபன் பதிவிட்டு ஹவுஸ் ஃபுல் படத்தின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News