சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

null

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு.. பணிப்பெண் கைது

Published On 2023-03-21 08:46 GMT   |   Update On 2023-03-21 12:10 GMT
  • வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயம்.
  • லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் என புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அவரது வீட்டில் பணியாற்றி வந்த பெண் பணியாளர் ஈஸ்வரியின் வங்கி கணக்கில் பரிவர்த்தனை நடத்தப்பட்டிருப்பதால் அது குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் பெண் பணியாளர் ஈஸ்வரி மற்றும் அவரது கணவரை விசாரித்தனர். இந்த விசாரணையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி சோலிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்திற்கு நிலம் வாங்கியிருப்பதும் வாங்கிய கடனை இரண்டே வருடங்களில் திருப்பி செலுத்தியிருப்பதும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.பெண் பணியாளர் ஈஸ்வரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈஸ்வரி நகை விற்றது எங்கே..? நிலம் வாங்கியது எப்படி..? போன்ற பல விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News