ஐ.பி.எல் நிகழ்ச்சியில் குத்தாட்டம் போடும் ராஷ்மிகா மந்தனா
- 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (31.03.2023 வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
- இந்த நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடனமாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 15 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (31.03.2023 வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மே மாதம் 28-ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐ.பி.எல். போட்டி 10 அணிகளுடன் மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இதன் தொடக்க நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் இதில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடனமாடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
Get ready for a dazzling and unforgettable evening ?@iamRashmika will be performing LIVE during the #TATAIPL Opening Ceremony at the biggest cricket stadium in the world - Narendra Modi Stadium! ?️
— IndianPremierLeague (@IPL) March 30, 2023
?️ 31st March, 2023 - 6 PM on @StarSportsIndia & @JioCinema pic.twitter.com/nNldHV3hHb