சினிமா செய்திகள்

சூர்யா

கங்குவா படப்பிடிப்பில் பிரியாணி வழங்கி மகிழ்ந்த சூர்யா

Published On 2023-05-07 08:40 GMT   |   Update On 2023-05-07 08:40 GMT
  • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
  • கொடைக்கானலில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

கங்குவா படக்குழு


தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


கங்குவா

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவா மற்றும் பிஜூ தீவுகளில் நடைபெற்று வந்ததையடுத்து தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 வாரங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் படத்தின் முக்கியமான வரலாற்று பகுதிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.


கங்குவா

இந்நிலையில் கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கங்குவா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. முழுவீச்சில் நடைபெற்று இதன் படப்பிடிப்பு மழையிலும் இடைவிடாமல் நடந்துள்ளதாகவும், படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் சூர்யா அனைவருக்கும் பிரியாணி வழங்கி மகிழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News