சினிமா செய்திகள்

சேத்தன் குமார்

இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு வேண்டும் - நடிகர் சேத்தன் குமார் கருத்து

Published On 2022-12-07 11:59 GMT   |   Update On 2022-12-07 11:59 GMT
  • கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சேத்தன் குமார்.
  • இவர் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு தேவை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சேத்தன் குமார், இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்திய கிரிக்கெட் அணியின் 70% பேர் உயர்சாதிகளை சேர்ந்தவர்கள். இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு இருப்பதை போல் கிரிக்கெட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும்.

 

சேத்தன் குமார்

பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடி சாதிகளில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்களின் ஆட்ட திறன் சிறப்பாக இருக்கும். தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு, அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு குழுவிலும் இடஒதுக்கீடு தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது நடிகர் சேத்தன் குமாரின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News