ராம் அப்துல்லா ஆண்டனி- திரை விமர்சனம்
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ராம், அப்துல்லா, ஆண்டனி. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். ஒரு நாள் ராம், அப்துல்லா, ஆண்டனி ஒன்றிணைந்து தொழிலதிபரான வேல. ராமமூர்த்தியின் பேரனை கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் போட்டு விடுகின்றனர்.
இதனை போலீசாக வரும் சௌந்தரராஜன் கண்டுபிடிக்கிறார். கொலை சம்பந்தமாக விசாரணையை மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர 3 பேரையும் கைதும் செய்து சிறையில் அடைக்கின்றனர்.
பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் கொலை செய்யும் அளவுக்கு ஏன் இவ்வளவு கொரூரமாக இருக்கின்றனர்? தொழிலதிபரின் பேரனை எதற்காக கடத்தி கொலை செய்தனர். சிறுவர்கள் இவ்வாறு மாறியதற்கு காரணம் என்ன என்பது படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தின் கதைக்கு ஏற்ப பூவையார், அர்ஜூன், அஜய் அர்னால் ஆகியோர் நடித்துள்ளனர். தலைவாசல் விஜய், சௌந்தரராஜன் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்துள்ளனர்.
இயக்கம்
ஜெயவேல் எழுதி இயக்கியுள்ள படம் சுவாரஸ்யமான படமாக்கல் மற்றும் இயல்பான காட்சிகளைக் கொண்டு செல்கிறது. சிறுவர்களின் ஆரம்பக் காட்சிகளில் செய்யும் காட்சிகளை திகிலூட்டுகிறது. சாய் தீனா கவனிக்க வைத்துள்ளார். கிளைமேக்ஸ் காட்சி உருக்கம்.
இசை
படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் புதுமுக இசையமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ணசேத்தன்.
ஒளிப்பதிவு
கதைக்கு ஏற்ற மேக்கிங் இல்லை. கதையில் சுவாரஸ்யம் இருந்தாலும் மிகவும் சாதாரணமான காட்சிகளாக நகர்கிறது.