சினிமா செய்திகள்

"ஜெயிலர்" படத்தில் பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தங்க நாணயம் பரிசு

Published On 2023-09-10 19:49 IST   |   Update On 2023-09-10 19:49:00 IST
  • ஜெயிலர் படத்தின் வெற்றியை அடுத்த இன்று சக்சஸ் மீட் நடைபெற்றது.
  • இயக்குனர் நெல்சன் திலீப்குமார், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடினர்.

இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. 'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்திற்கு கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வெற்றியை அடுத்த இன்று சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில், ஜெயிலர் படத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தங்க நாணயம் வழங்கி சிறப்பித்தார்.

மேலும், சக்சஸ் மீட்டை தொடர்ந்து அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. இதில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

Tags:    

Similar News