சினிமா செய்திகள்

தீபிகா - ரன்வீர் குடும்பத்தில் 3-வது நபர் - செப்டம்பரில் என்ட்ரி!

Published On 2024-02-29 06:01 GMT   |   Update On 2024-02-29 07:52 GMT
  • தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.
  • இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடியான தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் இன்று தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கலாம் என கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி பரவியது. 77-வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது விழாவில் சிகப்பு கம்பளத்தின் மீது பளபளக்கும் சேலையை அணிந்திருந்த போது அவர் தனது வயிற்றுப்பகுதியை மறைத்ததாக கூறப்படுகிறது. தீபிகா படுகோனே தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ள செய்தி பரவியதும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் தீபிகா தாய்மை பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். "நிச்சயமாக ரன்வீரும் நானும் குழந்தைகளை நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த குடும்பத்தைத் தொடங்கும் நாளுக்காக காத்திருக்கிறோம்" என்று அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News