சினிமா
ரித்திகா சிங்

திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங் - வைரலாகும் போட்டோஷூட்

Published On 2021-10-27 07:13 GMT   |   Update On 2021-10-27 07:13 GMT
நடிகை ரித்திகா சிங், தற்போது அருண் விஜய்யின் பாக்சர், விஜய் ஆண்டனியுடன் கொலை, பிச்சைக்காரன் 2, அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. 

கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், விஜய் ஆண்டனியுடன் கொலை, பிச்சைக்காரன் 2, அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.


ரித்திகா சிங்

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ரித்திகா சிங், சமீப காலமாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. கமர்ஷியல் பட வாய்ப்புகளை கைப்பற்றவே அவர் இவ்வாறு செய்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
Tags:    

Similar News