சினிமா
கார்த்திக் சுப்புராஜ்

இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

Published On 2021-06-27 15:53 IST   |   Update On 2021-06-27 15:53:00 IST
அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவரது நண்பர்கள் வழங்கினர்.
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற அவர், ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனரானார். தற்போது விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார். 


இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படம்

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள சுமார் 800 இலங்கை தமிழர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கொடுத்து உதவி உள்ளார். அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவரது நண்பர்கள் வழங்கினர்.

Similar News