சினிமா
ரிச்சா கங்கோபாத்யாய்

குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்த நடிகை ரிச்சா

Published On 2021-06-05 15:43 IST   |   Update On 2021-06-05 15:43:00 IST
மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரிச்சா கங்கோபாத்யாய், தனது குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மயக்கம் என்ன' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இப்படத்தை தொடர்ந்து சிம்புவுடன் இவர் நடித்த 'ஒஸ்தி' படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. 

சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டார் ரிச்சா. தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், தான் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.


ரிச்சாவின் குழந்தை

இந்த நிலையில் மே 27-ஆம் தேதி ரிச்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ‘லூகா’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். தற்போது குழந்தை புகைப்படத்தை பதிவு செய்து உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ரிச்சா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Similar News