சினிமா
மணிரத்னம், சுஹாசினி

பிறந்தநாளன்று டுவிட்டரில் இணைந்தாரா மணிரத்னம்? - நடிகை சுஹாசினி விளக்கம்

Published On 2021-06-03 09:19 IST   |   Update On 2021-06-03 19:13:00 IST
இயக்குனர் மணிரத்னம் தனது பிறந்தநாளன்று டுவிட்டரில் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவரது மனைவியும் நடிகையுமான சுஹாசினி விளக்கம் அளித்துள்ளார்.
சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள். ரசிகர்களுடன் கலந்துரையாடுவதற்காகவும், தங்களது படங்கள் குறித்த அப்டேட்டை வெளியிடுவதற்காகவும் அவர்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே சினிமா பிரபலங்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் மணிரத்னம், அதனை முன்னிட்டு டுவிட்டரில் இணைவதாக குறிப்பிட்டு போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது. இதனைப் பலரும் உண்மை என நம்பி அந்த போலி டுவிட்டர் கணக்கை பின்தொடரத் தொடங்கினார்கள். 


சுஹாசினி

பின்னர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி, தனது டுவிட்டர் பதிவு வாயிலாக அதனை போலியான டுவிட்டர் கணக்கு என்பதை உறுதிப்படுத்தினார். இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News