சினிமா
மு.க.ஸ்டாலின், சிவக்குமார்

மக்களை காப்பாத்துங்க முதல்வரே - மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவக்குமார் வேண்டுகோள்

Published On 2021-05-07 09:58 GMT   |   Update On 2021-05-07 10:24 GMT
கொரோனா காலத்திலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: “திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்திருக்கிறார். 19 ஆண்டுகள் அவர் தமிழகத்தில் ஆட்சி செய்திருக்கிறார். 1996-ல் திமுக 172 இடங்களில் வென்று ஆட்சியில் அமர்ந்தது. 

அதன் பின் 25 ஆண்டுகளுக்கு பிறகு, கலைஞர் இறந்த பிறகு 125 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக, தற்போது பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்றது, ஸ்டாலின் அவர்களுடைய இமாலய சாதனை. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, தாத்தாவிற்கு ஏற்ற பேரன் என்பதை நிரூபித்துள்ளார்.



முதல்வர் அவர்களுக்கு முதலிலே எனது வேண்டுகோள். கொரோனா காலத்திலிருந்து நம் மக்களை காப்பாத்துங்க. மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளிலும், காலையிலிருந்து மாலை வரை மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. 

ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை. படுக்கை இருந்தா, ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் இருந்தா, வெண்டிலேட்டர் இல்லை. இந்த காலத்திலிருந்து மக்களை காப்பாத்துங்க. மேலும் தமிழ் மொழி, விவசாயம், உழவர் சந்தை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News