சினிமா
சிம்பு

மேடை நாடகத்தில் நடிக்க ஆசைப்பட்டார் சிம்பு - பிரபல நடிகர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்

Published On 2021-05-03 10:20 GMT   |   Update On 2021-05-03 10:23 GMT
மாநாடு படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சிலம்பரசன், அப்படம் முடிந்தவுடன் நாடகத்தில் நடிக்க ஆசைப்பட்டதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், ஒய்.ஜி,மகேந்திரன், பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

குறிப்பாக இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார். சிம்புவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் கூறியதாவது: “சிலம்பரசன் சினிமாவைப் பற்றி அனைத்தும் தெரிந்தவர். திறமையானவர். இந்த ‘மாநாடு’ படம் அவரது திரையுலகப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். அந்த அளவுக்கு படப்பிடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்துள்ளார். 



அவர் இதுபோன்ற கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தார் என்றால் இன்னும் மிகப்பெரிய இடத்துக்குச் செல்வார். சிலம்பரசனைப் பொறுத்தவரை ஸ்பாட்டில் நடிக்கும்போது புதிது புதிதாக நிறைய விஷயங்களை மெருகூட்டிக் கொள்வார். என்னைப் போன்ற நாடகக் கலைஞர்கள் கையாளும் பாணி அது. 

இதைவிட ஒரு விஷயம் சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்.. “இந்தப்படம் எல்லாம் முடிந்து ஃப்ரீ ஆனதும் உங்களுடன் சேர்ந்து ஒரு நாடகம் நடிக்கவேண்டும் சார்” எனக் கூறினார். அது நடந்தால் நன்றாக இருக்கும்” என ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News