சினிமா
கார்த்திக்

படப்பிடிப்பில் 2வது தடுப்பூசி போட்டுக் கொண்டார் கார்த்திக்

Published On 2021-04-27 14:57 GMT   |   Update On 2021-04-27 14:57 GMT
பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் அந்தகன் படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக் 2வது தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்தியில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரசாந்த் சிம்ரன், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த நிலையில் இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கார்த்திக் ஏற்கனவே முதல் டோஸ் போட்டுக் கொண்டதால் தற்போது இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News