சினிமா
சூர்யா, பாண்டிராஜ்

கொரோனா பரவல் எதிரொலி... ‘சூர்யா 40’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு

Published On 2021-04-27 13:20 IST   |   Update On 2021-04-27 13:20:00 IST
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, சூர்யா 40 படக்குழு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாம்.
நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய சண்டைக் காட்சியை 100-க்கும் அதிகமான துணை நடிகர்களை வைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, அந்த சண்டைக் காட்சியை தற்போது படமாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.



இதனால், அந்தக் காட்சியை கொரோனா பரவல் முடிவுக்கு வந்தபின் எடுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ள படக்குழு, இதர காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்களாம். முதற்கட்டமாக திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகிறார்களாம்.

Similar News