சினிமா
தமிழில் மகாபிரபு, செல்வா, நிலாவே வா, சாக்லெட் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ், அடுத்ததாக ரஜினி படத்தை இயக்க இருக்கிறார்.
தமிழில் மகாபிரபு, செல்வா, நிலாவே வா, சாக்லெட் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். இவர் அங்காடி தெரு படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது ‘ரஜினி’ என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த தயாரிப்பாளருடன் 13 வருடங்களுக்கு முன்பு அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி அது மாபெரும் வெற்றி பெற்றது.
அதே வெற்றிக் கூட்டணி இந்த ‘ரஜினி’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
ரஜினி படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாகவும், கைநாட் அரோரா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.