சினிமா
சந்தோஷ் நாராயணன், என்ஜாய் எஞ்சாமி பாடல் போஸ்டர்

மகளின் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு வரவேற்பு - சந்தோஷ் நாராயணன் நெகிழ்ச்சி

Published On 2021-03-15 12:35 GMT   |   Update On 2021-03-15 16:05 GMT
ஏஆர் ரகுமான் சுயாதீன கலைஞர்களுக்காக உருவாகியுள்ள மாஜா என்ற தளத்தின் தயாரிப்பில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் உருவாகியுள்ளது.
பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தான் தற்போது தமிழ்நாட்டின் பரபரப்பு. இளைஞர்கள் மத்தியில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் ஏஆர் ரகுமான் சுயாதீன கலைஞர்களுக்காக உருவாகியுள்ள மாஜா என்ற தளத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. 

சந்தோஷ் நாராயணன் மகளான தீ பாடிய இந்தப் பாடலுக்கு அவர் இசையமைத்ததோடு தயாரிப்பையும் செய்துள்ளார். இந்தப் பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து சந்தோஷ் நாராயணன் நன்றி தெரிவித்துள்ளார். 



அவர் கூறியதாவது: “என்ஜாய் எஞ்சாமி பாடல் மீது மிகுந்த அன்பு செலுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி. தீ, அறிவு, முழு குழுவும் நானும் உங்கள் நிபந்தனையற்ற ஆதரவுக்கு உணர்வுப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பாடல் அனைத்து இசைக்கலைஞர்கள் மற்றும் சுயாதீன கலைஞர்களுக்கானது, அதன் வெளிப்பாடுகள் மகிமைப்படுத்தப்பட வேண்டும். 

ஆதரவு மற்றும் அங்கீகாரம் பெறப்படவேண்டிய குரல்களையும், கலைஞர்களையும் அடையாளம் காண்பதற்கான முயற்சியை நாங்கள் தொடருவோம். நாம் முன்னேறும்போது இந்த புரட்சியில் சேர பல சிறந்த கலைஞர்கள் உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் செய்யும் அனைத்தும் உங்களுக்காக, என் அன்பான மக்களே” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News