சினிமா
மனைவியுடன் மாரி செல்வராஜ்

இயக்குனர் மாரி செல்வராஜ் - திவ்யா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

Published On 2021-03-12 16:18 GMT   |   Update On 2021-03-13 09:41 GMT
பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலையே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது தனுஷின் கர்ணன் படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தினை இயக்க உள்ளார். சமீபத்தில் மாரி செல்வராஜின் மனைவி திவ்யாவிற்கு வளைக்காப்பு நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



ஏற்கனவே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
Tags:    

Similar News