சினிமா
அப்பாஸ்

நடிப்பை விட்டு விலக காரணம் என்ன? அப்பாஸ் பதில்

Published On 2021-01-21 17:19 GMT   |   Update On 2021-01-22 10:49 GMT
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் அப்பாஸ் சமீப காலமாக திரைப்படங்களில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் மனதிலும் காதல் நாயகனாக வலம் வந்தவர் அப்பாஸ். ஆனால் பெரும்பாலும் இரண்டாம் கட்ட கதாநாயகனாகவே நடித்து வந்தார். ஹீரோவாக நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றதில்லை.

பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு திருட்டுப்பயலே படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.



சமீபத்தில் அவர் பேட்டியளித்துள்ளார். அப்போது ஏன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டீர்கள்? என்ற கேள்விக்கு, தன்னையும் வியக்க வைக்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை எனவும், நாளுக்கு நாள் நடிப்பு மிகவும் போர் அடித்து விட்டதால் சினிமாவை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நல்லபடியாக இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News