சினிமா
ஆரி

ஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்

Published On 2021-01-18 09:33 GMT   |   Update On 2021-01-18 09:36 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் டைட்டில் வின்னரான ஆரி, தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த அக்டோபர் 4ந் தேதி தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

இவர்களில் அதிக வாக்குகள் பெற்ற ஆரி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஆரிக்கு டைட்டில் வின்னருக்கான கோப்பையும், ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் கமல்ஹாசன் வழங்கினார். இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் இல்லாத அளவிற்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆரி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், டைட்டில் ஜெயிச்சதும் தனது சமூக வலைதள பக்கத்தில் கோப்பையுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஆரி. “எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே” எனப் பதிவிட்டு ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.
Tags:    

Similar News