சினிமா
ஆதரவற்ற குழந்தைகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த சூரி

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

Published On 2021-01-17 13:07 GMT   |   Update On 2021-01-17 13:07 GMT
மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் சூரி. இவர் தற்போது ஹீரோவாகவும் மாறி உள்ளார். வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடியுள்ளார். அப்போது அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார். 

மேலும் குழந்தைகளுக்கு தேவைப்படும் நோட், ஸ்கூல் பேக், உண்டியல் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேர வேண்டும் என்று குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கியதோடு அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். சூரியின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Tags:    

Similar News