சினிமா
புதிய படத்தின் தலைப்பை நாளை வெளியிடும் செல்வராகவன்
தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பை நாளை மாலை வெளியிட இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை வி கிரியேசன்ஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை நாளை மாலை 7.10 மணிக்கு வெளியிட இருப்பதாக செல்வராகவன் அறிவித்துள்ளார்.