சினிமா
சசிகுமார்

சிறைக் கைதிகளுடன் நடிக்கும் சசிகுமார்

Published On 2020-12-17 08:41 GMT   |   Update On 2020-12-17 08:41 GMT
அனிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தில் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை நடிக்கவைக்க உள்ளார்களாம்.
சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’. இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். இதில் சசிகுமா ஜோடியாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர். மேலும் நாசர், சதிஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரில்லர் திரைப்படமாக இது உருவாகிறது. ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.



கைதிகளின் வாழ்க்கை முறையைப் பற்றி கதைகளம் அமைந்துள்ளதால், உண்மையிலேயே சிறைவாசம் அனுபவித்த கைதிகளை நடிக்கவைக்க உள்ளார்களாம். இதற்காக சிறையில் இருந்து விடுதலையான சிலரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். சிறையில் இருந்தவர்களை நடிக்க வைத்தால் கதையின் நம்பகத்தன்மைக்கு உதவும் என்பதால் அவர்களை நடிக்க வைப்பதாக இயக்குனர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News