சினிமா
சுந்தர் சி, ஜெய்

சுந்தர் சி-க்கு வில்லனான ஜெய்?

Published On 2020-12-17 03:48 GMT   |   Update On 2020-12-17 03:48 GMT
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் சுந்தர் சி, அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

சமீபத்தில் இவர் தயாரித்த ‘நாங்க ரொம்ப பிஸி’ திரைப்படம் தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. சுந்தர் சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி இப்படத்தை இயக்கினார். இவர் ஏற்கனவே வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.



இந்நிலையில், சுந்தர் சி அடுத்ததாக தயாரிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தையும் பத்ரி தான் இயக்க உள்ளாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் சுந்தர் சி ஹீரோவாகவும் நடிக்கிறாராம். மேலும் இந்த படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோவை விட வில்லனுக்கு பவர்புல்லான ரோல் என்பதால் ஜெய் இதில் நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News