சினிமா
வரலட்சுமி

டூப் இல்லாமல் சண்டை போட்ட வரலட்சுமி

Published On 2020-12-10 10:41 GMT   |   Update On 2020-12-10 13:51 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார் ஒரு படத்தில் டூப் இல்லாமல் சண்டை போட்டு இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ”போடா போடி” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. அதிரடி கதாபாத்திரங்கள், ரிஸ்க்கான காட்சிகள் என துணிச்சலாக எடுத்து நடிக்கும் திறமையான நடிகை வரலட்சுமி. இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது. 

வரலட்சுமியின் கைவசம் தற்போது காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, சேசிங், ஆகிய தமிழ் திரைப்படங்கள் உள்ளன. தெலுங்கிலும் இவருக்கு நந்தி, கிராக் ஆகிய படங்களும் கன்னடத்தில் ரணம் என மொத்தம் ஒன்பது படங்கள் உள்ளன. மேலும் இவரது நடிப்பில் சேசிங் திரைப்படம் வெளியாக உள்ளது. 



இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது இந்த படத்தில் வரலட்சுமி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கே வீரக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் அனைத்திற்கும் நடிகை வரலட்சுமி டூப் போடாமலேயே நடித்து தன் திறமையை காட்டியுள்ளார். மூன்று வில்லன்கள் உள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
Tags:    

Similar News