சினிமா
இயக்குனர் பா ரஞ்சித்

குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குனர் பா.ரஞ்சித் எதிர்ப்பு

Published On 2020-12-09 13:05 GMT   |   Update On 2020-12-09 13:05 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் பா.ரஞ்சித் குடிசை வாழ் மக்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மெட்ராஸ் கபாலி காலா உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், சென்னை தீவுத்திடல் அருகே காந்திநகர் குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குனர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

ஆளும்கட்சியினர் சென்னையை சுத்தப்படுத்தும் திட்டத்தை மட்டும் தான் சரியாக செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றினால் அப்பகுதியில் இருந்து 8 கி.மீ தொலைவுக்குள் இடம் தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News