சினிமா
சித்ரா

மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது - சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

Published On 2020-12-09 12:53 IST   |   Update On 2020-12-09 12:53:00 IST
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றவர் சித்ரா. இவர் சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

இந்நிலையில், சித்ராவின் இறப்பு குறித்து பேசியுள்ள அவரது தாய், தனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர் என்றும் அவளது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

Similar News