சினிமா
திரிஷா

ஓராண்டு நிறைவு - திரிஷாவின் மறக்க முடியாத நாள்

Published On 2020-12-08 15:41 GMT   |   Update On 2020-12-08 15:41 GMT
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, ஓராண்டு நிறைவு என்று கூறி புதிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 18 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



செல்லப் பிராணிகள் மீது அன்பாகவும் ஆசையுடன் இருக்கும் திரிஷா, தான் வளர்த்த zoya என்ற நாய் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் அதன் நினைவஞ்சலியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News